என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவையிலும் நிதி மசோதா நிறைவேறியது - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
Byமாலை மலர்25 March 2021 12:25 AM GMT (Updated: 25 March 2021 12:25 AM GMT)
2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி:
2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக அதில் பரிந்துரைக்கப்பட்ட 127 திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தன.
இதைத்தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நேற்று விவாதம் நடந்தது. முடிவில் மசோதாவும், அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது. பின்னர் எந்தவித திருத்தமோ, பரிந்துரையோ இன்றி மக்களவைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு இந்த மசோதா நாடாளுமன்ற ஒப்புதலை பெற்று இருக்கிறது.
முன்னதாக மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதங்களுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர், நிதி மசோதாவில் உள்ள அதிக பற்றாக்குறையின் விளைவாக இந்தியாவின் இறையாண்மை மதிப்பீடு தரமிறக்கப்படும் அபாயம் இல்லை என தெரிவித்தார். குறைவான பணவீக்கம், அதிக ஜி.டி.பி. வளர்ச்சி, சாதனை அளவான அன்னிய முதலீடு மற்றும் குறைவான நிதி பற்றாக்குறையை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், இது பொருளாதாரத்தை அரசு சிறப்பாக கையாளுவதன் வெளிப்பாடு எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த மாதம் 1-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக அதில் பரிந்துரைக்கப்பட்ட 127 திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தன.
இதைத்தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நேற்று விவாதம் நடந்தது. முடிவில் மசோதாவும், அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது. பின்னர் எந்தவித திருத்தமோ, பரிந்துரையோ இன்றி மக்களவைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு இந்த மசோதா நாடாளுமன்ற ஒப்புதலை பெற்று இருக்கிறது.
முன்னதாக மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதங்களுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர், நிதி மசோதாவில் உள்ள அதிக பற்றாக்குறையின் விளைவாக இந்தியாவின் இறையாண்மை மதிப்பீடு தரமிறக்கப்படும் அபாயம் இல்லை என தெரிவித்தார். குறைவான பணவீக்கம், அதிக ஜி.டி.பி. வளர்ச்சி, சாதனை அளவான அன்னிய முதலீடு மற்றும் குறைவான நிதி பற்றாக்குறையை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், இது பொருளாதாரத்தை அரசு சிறப்பாக கையாளுவதன் வெளிப்பாடு எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X