என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக எம்.பி. முகமது ஜான் மறைவுக்கு மேல்சபையில் அனுதாபம்
Byமாலை மலர்24 March 2021 9:07 AM GMT (Updated: 24 March 2021 9:07 AM GMT)
மேல்சபை எம்.பி.யான முகமது ஜான் மறைவுக்கு பாராளுமன்ற மேல்சபையில் இன்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. மேல்சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் தனது சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அவர் 2019-ம் ஆண்டு மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மந்திரி சபையில் 2 ஆண்டுகள் மந்திரியாக பணியாற்றினார்.
மேல்சபை எம்.பி.யான முகமது ஜான் மறைவுக்கு பாராளுமன்ற மேல்சபையில் இன்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
மேல்சபை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் செய்தியை வாசித்தார். முகமது ஜான் எம்.பி.யின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சபை 1 மணிநேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
அ.தி.மு.க. மேல்சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் தனது சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அவர் 2019-ம் ஆண்டு மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மந்திரி சபையில் 2 ஆண்டுகள் மந்திரியாக பணியாற்றினார்.
மேல்சபை எம்.பி.யான முகமது ஜான் மறைவுக்கு பாராளுமன்ற மேல்சபையில் இன்று அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
மேல்சபை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் செய்தியை வாசித்தார். முகமது ஜான் எம்.பி.யின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சபை 1 மணிநேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X