என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் பரம்பீர் சிங் மனு
Byமாலை மலர்23 March 2021 1:44 AM GMT (Updated: 23 March 2021 1:44 AM GMT)
மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மதுபான விடுதி, ஓட்டல்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மும்பை :
மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மதுபான விடுதி, ஓட்டல்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
மந்திரி அனில் தேஷ்முக் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழிக்கும் முன் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக அவர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் நான் மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது. எனவே மாநில அரசின் இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட பரம்பீர் சிங் நேற்று மராட்டிய ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மதுபான விடுதி, ஓட்டல்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
மந்திரி அனில் தேஷ்முக் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழிக்கும் முன் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக அவர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் நான் மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது. எனவே மாநில அரசின் இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட பரம்பீர் சிங் நேற்று மராட்டிய ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X