என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் - மோடிக்கு, பூடான் பிரதமர் நன்றி
Byமாலை மலர்22 March 2021 8:55 PM GMT (Updated: 22 March 2021 8:55 PM GMT)
முதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.
புதுடெல்லி:
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான ‘கோவேக்சின்' ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளையும் இந்தியா அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில் முதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.
இந்தநிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும்படி பூடான் இந்தியாவை கேட்டுக்கொண்டது. அதன்படி 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் பூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனை பூடானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டாண்டி டோர்ஜியிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "கூடுதலாக 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பெறுவதில் மகிழ்ச்சி. இது எங்கள் தடுப்பூசித் திட்டத்தை நாடு தழுவிய அளவில் சாத்தியமாக்கும். பூடான் மக்களும், நானும் பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான ‘கோவேக்சின்' ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளையும் இந்தியா அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கி வருகிறது.
அந்த வகையில் முதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.
இந்தநிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும்படி பூடான் இந்தியாவை கேட்டுக்கொண்டது. அதன்படி 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் பூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனை பூடானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டாண்டி டோர்ஜியிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "கூடுதலாக 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பெறுவதில் மகிழ்ச்சி. இது எங்கள் தடுப்பூசித் திட்டத்தை நாடு தழுவிய அளவில் சாத்தியமாக்கும். பூடான் மக்களும், நானும் பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X