என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடக்கம்
Byமாலை மலர்21 March 2021 7:13 PM GMT (Updated: 21 March 2021 7:13 PM GMT)
சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம்? என்பதை பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்டத்துறை மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நிறைவடைகிறது. எனவே புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
அந்தவகையில் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம்? என்பதை பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி தகுதியான மிக மூத்த நீதிபதியை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைப்பார். அவரின் பரிந்துரையை பெற்றபின் அது குறித்து ரவிசங்கர் பிரசாத் பிரதமர் மோடிக்கு தெரிவிப்பார். பின்னர் அவர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார்.
தலைமை நீதிபதி பரிந்துரைக்கும் நபரின் தகுதியில் ஏதாவது சந்தேகம் எழுந்தால், பிற நீதிபதிகளுடன் அரசு கலந்தாலோசித்து புதிய தலைமை நீதிபதியை இறுதி செய்யும்.
தற்போதைய நிலையில் மிக மூத்த நீதிபதியாக என்.வி.ரமணா உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நிறைவடைகிறது. எனவே புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
அந்தவகையில் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம்? என்பதை பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி தகுதியான மிக மூத்த நீதிபதியை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைப்பார். அவரின் பரிந்துரையை பெற்றபின் அது குறித்து ரவிசங்கர் பிரசாத் பிரதமர் மோடிக்கு தெரிவிப்பார். பின்னர் அவர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார்.
தலைமை நீதிபதி பரிந்துரைக்கும் நபரின் தகுதியில் ஏதாவது சந்தேகம் எழுந்தால், பிற நீதிபதிகளுடன் அரசு கலந்தாலோசித்து புதிய தலைமை நீதிபதியை இறுதி செய்யும்.
தற்போதைய நிலையில் மிக மூத்த நீதிபதியாக என்.வி.ரமணா உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X