search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கேரளாவில் இன்று புதிதாக 1,875- பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 04 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் 2,251 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

    கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 44,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 4,495 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×