என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூரு அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்21 March 2021 5:05 AM GMT (Updated: 21 March 2021 5:05 AM GMT)
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால், எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு அருகே நடந்து உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவர் தொட்டபள்ளாப்புரா டவுனில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்த பின்னர் சினேகா தனது தோழிகளுடன் செல்போனில் அதிக நேரம் பேசி கொண்டே இருந்ததாகவும், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சினேகா கடந்த 3-ந் தேதி வீட்டில் வைத்து எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தொட்டபள்ளாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சினேகா இறந்து விட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சினேகாவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் எலி மருந்தை தின்று சினேகா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா டவுன் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவர் தொட்டபள்ளாப்புரா டவுனில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தினமும் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வந்த பின்னர் சினேகா தனது தோழிகளுடன் செல்போனில் அதிக நேரம் பேசி கொண்டே இருந்ததாகவும், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சினேகா கடந்த 3-ந் தேதி வீட்டில் வைத்து எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தொட்டபள்ளாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சினேகா இறந்து விட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சினேகாவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் எலி மருந்தை தின்று சினேகா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X