search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மராட்டியத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா

    மராட்டியத்தில் இன்று புதிதாக 27,126 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. குறிப்பாக முதலில் பரவியதை விட தற்போது தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. நேற்று மாநிலத்தில் தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. அதாவது புதிதாக 25 ஆயிரத்து 681 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று  27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “மராட்டிய மாநிலத்தில் இன்று 27 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 13,588-ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று 92- பேர் உயிரிழந்துள்ளனர். 

    மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 147- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 22 லட்சத்து 03 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் 1 லட்சத்து 91 ஆயிரத்து 006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    Next Story
    ×