என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா
Byமாலை மலர்20 March 2021 3:09 PM GMT (Updated: 20 March 2021 3:09 PM GMT)
மராட்டியத்தில் இன்று புதிதாக 27,126 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. குறிப்பாக முதலில் பரவியதை விட தற்போது தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. நேற்று மாநிலத்தில் தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. அதாவது புதிதாக 25 ஆயிரத்து 681 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “மராட்டிய மாநிலத்தில் இன்று 27 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 13,588-ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று 92- பேர் உயிரிழந்துள்ளனர்.
மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 147- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 22 லட்சத்து 03 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் 1 லட்சத்து 91 ஆயிரத்து 006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X