என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகக்கவசம் ஒழுங்காக அணியாத பயணிகள் மீது நடவடிக்கை - விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
Byமாலை மலர்14 March 2021 12:18 AM GMT (Updated: 14 March 2021 12:18 AM GMT)
முகக்கவசம் உரிய முறையில் அணியாவிட்டால் பயணிகளை தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டிஜிசிஏ உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பயணிகளிடம் திரும்பத் திரும்ப அறிவுறுத்தியும் முகக்கவசத்தை உரிய முறையில் அணிய மறுத்தால் அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாட்டில் பல இடங்களில் அதிகாரித்துள்ள சூழலில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குள் நுழைவது முதல் வெளியேறுவது வரை கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X