என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காள தேர்தலுக்கான காங்கிரஸ் பேச்சாளர்கள் பட்டியல் - புறக்கணிக்கப்பட்ட ஜி 23 தலைவர்கள்
Byமாலை மலர்12 March 2021 5:55 PM GMT (Updated: 12 March 2021 5:55 PM GMT)
மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்காக 30 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் ஆகியோர் உள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் முகமது அசாருதீன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித், ராஜஸ்தான் துணை முதல் மந்திரி சச்சின் பைலட், முன்னாள் கிரிக்கெட்டர் நவ்ஜோத் சிங் சித்து, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜிதின் பிரசாதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல் , ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, மனீஷ் திவாரி உள்ளிட்ட ஜி 23 தலைவர்களில் ஒருவரின் பெயரும் இடம்பெறவில்லை.
மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்காக 30 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி கமல்நாத் ஆகியோர் உள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் முகமது அசாருதீன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித், ராஜஸ்தான் துணை முதல் மந்திரி சச்சின் பைலட், முன்னாள் கிரிக்கெட்டர் நவ்ஜோத் சிங் சித்து, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜிதின் பிரசாதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல் , ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, மனீஷ் திவாரி உள்ளிட்ட ஜி 23 தலைவர்களில் ஒருவரின் பெயரும் இடம்பெறவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X