என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் 15ம் தேதி வரை ஒத்திவைப்பு
Byமாலை மலர்10 March 2021 9:53 AM GMT (Updated: 10 March 2021 11:19 AM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்படுகிறது.
இன்றும் இந்த விவகாரம் எதிரொலித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கும்படி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி அளிக்கப்படாததால் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அடுத்தடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், பாராளுமன்ற இரு அவைகளும் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
75வது சுதந்திர கொண்டாட்டங்கள் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டு உரையாற்ற விரும்பியதாகவும், அவையில் ஒருமித்த கருத்து இல்லாததால் அவர் இப்போது உரையாற்ற மாட்டார் என்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி கூறினார். ஒருமித்த கருத்து ஏற்பட்டதும் பிரதமர் உரையாற்றுவார் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X