என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
Byமாலை மலர்7 March 2021 10:34 AM GMT (Updated: 7 March 2021 10:34 AM GMT)
மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பெண்கள் பேரணியாக சென்றனர்.
சிலிகுரி:
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை வீழ்த்திவிட்டு இந்த தடவை ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து சிலிகுரியில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மம்தா பானர்ஜி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் பேரணியாக சென்றனர்.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X