என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படத்தை நீக்கவேண்டும் - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
Byமாலை மலர்6 March 2021 10:43 PM GMT (Updated: 6 March 2021 10:43 PM GMT)
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் மார்ச் 27-ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது.
அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நிறைவடைகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அதற்கான தடுப்பூசி சான்றிதழ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், ’ஒருங்கிணைந்து இந்தியா கொரோனாவை வெல்லும்’ என்ற வாசகமும் அந்த சான்றிதழில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறக்கூடாது என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலையடுத்து இம்மாநிலங்களில் இனி வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறுவதில் எந்த தடையும் கிடையாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் மார்ச் 27-ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறுகிறது.
அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நிறைவடைகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அதற்கான தடுப்பூசி சான்றிதழ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், ’ஒருங்கிணைந்து இந்தியா கொரோனாவை வெல்லும்’ என்ற வாசகமும் அந்த சான்றிதழில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறக்கூடாது என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலையடுத்து இம்மாநிலங்களில் இனி வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறுவதில் எந்த தடையும் கிடையாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X