என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் நர்சுக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்6 March 2021 4:04 AM GMT (Updated: 6 March 2021 4:04 AM GMT)
2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலம் நாக்பூர் காம்டி அரசு ஆஸ்பத்திரியில் 42 வயது நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 16-ந் தேதி, முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டார். பின்னர் பிப்ரவரி 18-ந் தேதி 2-வது டோஸ் தடுப்பு மருந்தும் நர்சுக்கு செலுத்தப்பட்டது. இந்தநிலையில் நர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொற்று அறிகுறிகள் தெரிந்தது.
எனவே மார்ச் 2-ந் தேதி அவர்களுக்கு ஆண்டிஜன் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நர்ஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
நேற்றுமுன்தினம் நர்சு மற்றும் குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூர் காம்டி அரசு ஆஸ்பத்திரியில் 42 வயது நர்ஸ் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 16-ந் தேதி, முதல் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்டார். பின்னர் பிப்ரவரி 18-ந் தேதி 2-வது டோஸ் தடுப்பு மருந்தும் நர்சுக்கு செலுத்தப்பட்டது. இந்தநிலையில் நர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொற்று அறிகுறிகள் தெரிந்தது.
எனவே மார்ச் 2-ந் தேதி அவர்களுக்கு ஆண்டிஜன் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நர்ஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
நேற்றுமுன்தினம் நர்சு மற்றும் குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X