என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ
Byமாலை மலர்5 March 2021 10:08 AM GMT (Updated: 5 March 2021 10:08 AM GMT)
பூஸ்டர் மோட்டார் உள்ளிட்ட அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, சிறப்பாக செயல்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சந்திபூர்:
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (டிஆர்டிஓ) ராணுவத்திற்கு தேவையான ஏவுகணை உள்ளிட்ட தளவாடங்களை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. அவ்வகையில், ரஷியாவுடன் இணைந்து திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை (எஸ்எப்டிஆர்) தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணையை சோதனை செய்துவருகிறது.
இந்நிலையில், புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையானது, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இன்று மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் இன்றைய சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். பூஸ்டர் மோட்டார் உள்ளிட்ட அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X