என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினை ஆண்டு அறிவிப்பு : உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
Byமாலை மலர்5 March 2021 12:49 AM GMT (Updated: 5 March 2021 12:49 AM GMT)
தினை வகைகளை பிரபலப்படுத்தும் வகையில் 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
தினை வகைகளை பிரபலப்படுத்தும் வகையில் 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, ரஷியா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை 70-க்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்தன.
இதன் மூலம் தினை வகையால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிரிடும் முறைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.
இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தினை வகைகளை பிரபலப்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது பெருமை. அதன் நுகர்வு ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனை மேலும் மேம்படுத்துகிறது. மேலும் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் ஸ்டார்ட்-அப் சமூகத்தினருக்கு தினை தொடர்பான ஆய்வு மற்றும் புத்தாக்க சாத்தியங்களை உருவாக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஐ.நா.வில் தினை ஆண்டு அறிவிப்பு தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடி, புகழ்பெற்ற பிரதிநிதிகளுக்கு ஒரு நொறுக்குத்தீனியாக சுவையான தினை முறுக்கு வழங்கப்பட்டதாகவும், இதை அனைவரும் முயற்சி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினை வகைகளை பிரபலப்படுத்தும் வகையில் 2023-ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, ரஷியா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை 70-க்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்தன.
இதன் மூலம் தினை வகையால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிரிடும் முறைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.
இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தினை வகைகளை பிரபலப்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது பெருமை. அதன் நுகர்வு ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனை மேலும் மேம்படுத்துகிறது. மேலும் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் ஸ்டார்ட்-அப் சமூகத்தினருக்கு தினை தொடர்பான ஆய்வு மற்றும் புத்தாக்க சாத்தியங்களை உருவாக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஐ.நா.வில் தினை ஆண்டு அறிவிப்பு தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடி, புகழ்பெற்ற பிரதிநிதிகளுக்கு ஒரு நொறுக்குத்தீனியாக சுவையான தினை முறுக்கு வழங்கப்பட்டதாகவும், இதை அனைவரும் முயற்சி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X