என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்சுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Byமாலை மலர்3 March 2021 11:56 AM GMT (Updated: 3 March 2021 12:22 PM GMT)
பிரான்ஸ் நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் உயிரி ஆற்றல் தொடர்பான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பரஸ்பர நன்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர பரிமாற்ற அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அடிப்படையை நிறுவுவதே இந்த ஒப்பந்தத்தின் அம்சம் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் உயிரி ஆற்றல் தொடர்பான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவிற்கும் பிஜிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 5 வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X