என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேள்வித்தாள் வெளியானதால் அகில இந்திய அளவிலான ராணுவ தேர்வு ரத்து
Byமாலை மலர்28 Feb 2021 11:48 PM GMT (Updated: 28 Feb 2021 11:57 PM GMT)
கேள்வித்தாள் வெளியானதால் வீரர்கள் நியமனத்துக்கான அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வை ராணுவம் ரத்து செய்தது.
புதுடெல்லி:
அகில இந்திய அளவிலான பொதுப்பணி வீரர்கள் நியமனத்துக்கான நுழைவுத்தேர்வை நடத்த ராணுவம் தயாராகி இருந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நேற்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையில், குறிப்பிட்ட தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, வீரர்கள் நியமனத்துக்கான பொது நுழைவுத்தேர்வை ராணுவம் ரத்து செய்தது.
மேலும் இதுதொடர்பாக புனேயில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை தொடர்ந்து பேணும் வகையில் தேர்வை ரத்து செய்ய ராணுவம் முடிவெடுத்தது.
தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நியமன நடைமுறையில் முறைகேட்டை இந்திய ராணுவம் முற்றிலும் சகித்துக் கொள்ளாது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அகில இந்திய அளவிலான பொதுப்பணி வீரர்கள் நியமனத்துக்கான நுழைவுத்தேர்வை நடத்த ராணுவம் தயாராகி இருந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நேற்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையில், குறிப்பிட்ட தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, வீரர்கள் நியமனத்துக்கான பொது நுழைவுத்தேர்வை ராணுவம் ரத்து செய்தது.
மேலும் இதுதொடர்பாக புனேயில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை தொடர்ந்து பேணும் வகையில் தேர்வை ரத்து செய்ய ராணுவம் முடிவெடுத்தது.
தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நியமன நடைமுறையில் முறைகேட்டை இந்திய ராணுவம் முற்றிலும் சகித்துக் கொள்ளாது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X