search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    நாட்டின் முதல் பொம்மை கண்காட்சி: பிளாஸ்டிக்கை குறைவாக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

    நாட்டின் முதலாவது பொம்மை கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்துமாறு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா பொம்மைகள் கண்காட்சி 2021 என்ற பெயரில் அமைந்த நாட்டின் முதலாவது பொம்மை கண்காட்சியை நேற்று காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நம் நாட்டின் பொம்மை தயாரிப்பு தொழிலில் எவ்வளவு வலிமை மறைந்து இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த வலிமையை அதிகரிப்பது, அதன் அடையாளத்தை அதிகரிப்பது, சுயசார்பு இந்தியா பிரசாரத்தின் ஒரு பெரிய பகுதியாகும்.

    நாட்டின் முதல் பொம்மை கண்காட்சியில் நாம் எல்லாம் ஒரு அங்கமாக மாறி இருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

    இது ஒரு வணிக அல்லது பொருளாதார நிகழ்வு மட்டுமல்ல. இது நாட்டின் பழமையான அழகான விளையாட்டு கலாசாரத்தை வலுப்படுத்துவதற்கான தொடர்பு ஆகும்.

    பொம்மைகளுடனான நமது உறவு, நாகரிகத்தை போலவே பழமையானது. நமது கோவில்கள், பொம்மை தயாரிக்கும் வளமையான கலாசாரத்துக்கு சான்றாக நிற்கின்றன.

    இந்த கண்காட்சியில் 30 மாநிலங்களை சேர்ந்த 1000-க் கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர், பள்ளிகள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை பங்கேற்கிறார்கள் என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. உங்கள் அனைவருக்கும் இது பொம்மை வடிவமைப்புகள், புதுமை, தொழில்நுட்பம் முதல் சந்தைப்படுத்துதல், பேக்கேஜிங் வரை உங்கள் அனுபவங்களை பற்றி விவாதிக்கும் ஒரு மன்றமாக இருக்கும்.

    இந்த கண்காட்சியில், ஆன்லைன் விளையாட்டு துறையின் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய அறிய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இங்குள்ள குழந்தைகளுக்காக நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை காண விரும்பினேன்.

    இந்திய பொம்மைககள்இந்திய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருந்தமறுபயன்பாடு மறுசுழற்சி கலாசாரத்தை திட்டமிடுகின்றன. பொம்மை உற்பத்தியாளர்கள் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

    சுற்றுச்சூழல் மற்றும் உளவியல் ஆகிய இரண்டுக்கும் சிறப்பான பொம்மைகளை உருவாக்க வேண்டும் என்று நாட்டின் பொம்மை உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பொம்மைகளில் நாம் குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அதிகமாக பயன்படுத்தலாமா?

    பொம்மை தயாரிப்பு துறையில் நாம் சுயசார்பு அடைய வேண்டும்.

    கடந்த 70 ஆண்டுகளில் இந்திய கலைஞர்களின் பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படுகிற பொம்மைகள், வெளிப்புற எண்ணங்களை அவற்றுடன் கொண்டு வந்தன. நாம் இந்த சூழ்நிலையை ஒன்றிணைந்து மாற்ற வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்காக நாம் கூடுதல் குரல் கொடுக்க வேண்டும்.

    பொம்மை திரள்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு சமமான பங்களிப்பு உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கண்காட்சி மார்ச் 2-ந் தேதி வரை நடக்கிறது. பொம்மை வாங்குவோர், விற்போர், மாணவர்கள், ஆசிரியர்கள், வடிமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதாக இந்த பொம்மை கண்காட்சி அமைந்துள்ளது.
    Next Story
    ×