என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் சொகுசு கார் மோதி ஒருவர் பலி... மாணவன் கைது
Byமாலை மலர்26 Feb 2021 9:22 AM GMT (Updated: 26 Feb 2021 9:22 AM GMT)
டெல்லியில் சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் 18 வயது மாணவர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லியின் வசந்த் விகார் பகுதியில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று, ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில், ஸ்கூட்டியை ஓட்டிவந்த அந்தோணி ஜோசப் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ஆர்யன் ஜெயின் (18 வயது) என்ற மாணவனை கைது செய்தனர்.
விபத்தில் உயிரிழந்த அந்தோணி ஜோசப் உத்தர பிரதேசத்தில் கோரக்பூரைச் சேர்ந்தவர். அவரது மகன் டெல்லியில் வேலைபார்த்து வருகிறார். காரை ஓட்டி வந்த ஆர்யன் ஜெயினும் உத்த்ர பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான். அவரது தந்தை சுஷில் ஜெயின் டெல்லியில் நகைக்கடை வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரை ஓட்டியபோது ஆர்யன் ஜெயின் போதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X