என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மற்ற முதல்வர்களுடன் பேச இருக்கிறேன்- மம்தா பானர்ஜி
Byமாலை மலர்25 Feb 2021 2:24 PM GMT (Updated: 25 Feb 2021 2:24 PM GMT)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, இதுகுறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையோடு சிலிண்டர் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதுகுறித்து மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘எரிபொருள் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்பிஜி சிலிண்டர் விலை 800 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளன. இந்த வருட பட்ஜெட்டில் மண்எண்ணெய்க்கு வழங்கிய மானியம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்ற முதல்வர்களுடன் பேச இருக்கிறேன்.
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு பக்கமும் அதானி மற்றும் அம்பானி பிரதர்கள் உள்ளனர். நாம் இருவர் நமக்கு இவர் என்ற அடிப்படையில்’’ என்றார்.
சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி மைதானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த மைதானத்தில் பந்து வீசப்படும் முனைகளுக்கு ரிலையன்ஸ் என்ட்ஸ், அதானி என்ட்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை வைத்துதான் மம்தா பானர்ஜி அப்படி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X