என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவில் போதை பொருள் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 பேர் கைது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 14 வயதில் மகள் உள்ளார்.
இச்சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இதனால் அந்த சிறுமி தனது தாய், சகோதரனுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
கொரோனா பிரச்சினையால் பள்ளிகள் திறக்கப்படாத நேரத்தில் சிறுமி தாயாரின் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வந்தார்.
சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்த சிறுமியின் உறவினர் மூலம் சிறுமிக்கு மேலும் சில வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர்கள் தினமும் சிறுமியுடன் சமூக வலைதளம் மூலம் பேசி வந்தனர்.
பின்னர் அவர்கள் சிறுமியை வெளியே வருமாறு அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று சிறுமியும் அந்த வாலிபர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்றார்.
சிறுமிக்கு அந்த வாலிபர்கள் போதை பழக்கத்தை ஏற்படுத்தினர். அதற்கு அடிமையான அந்த சிறுமிக்கு வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர்.
கடந்த 8 மாதங்களாக அவர் வாலிபர்களின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தாயாரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்தாசிடம் புகார் செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி சிறுமிக்கு தொல்லை கொடுத்த நபர்களை கண்டுபிடிக்க தனிபடை அமைக்கப்பட்டது. அவர்கள் சிறுமி பயன்படுத்திய செல்போன் மூலம் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டுபிடித்தனர். இதில் சிறுமியின் உறவினர் உள்பட 7 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 376, சிறுவர் சட்டப்பிரிவு 77 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவ செய்யப்பட்டது.
இதில் முதல் கட்டமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மலப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்