என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை- கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் முழு அடைப்பு
Byமாலை மலர்25 Feb 2021 8:36 AM GMT (Updated: 25 Feb 2021 8:36 AM GMT)
ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
ஆலப்புழா:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர் நந்து (வயது 23) வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையைக் கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆலப்புழா மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
சேர்தலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X