search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    5 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம் - டெல்லி அரசு உத்தரவு

    மராட்டியம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் மராட்டியம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மராட்டியம், கேரளா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தவருக்கு டெல்லி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் மாதம் 15-ந் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும்” என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×