என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது - மம்தா பானர்ஜி
Byமாலை மலர்24 Feb 2021 1:24 PM GMT (Updated: 24 Feb 2021 1:24 PM GMT)
மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
ஹூக்ளி:
மேற்குவாங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக போராடி வருகிறது. இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது, அதே நேரத்தில் பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஹூக்ளியில் நடந்த ஒரு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட மோசமான விதி பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது. சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. எந்த மோடியும், குஜராத்தும் வங்காளத்தை ஆளாது, வங்காளம் மட்டுமே வங்காளத்தை ஆளும்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவியை சிபிஐ விசாரிப்பது எங்கள் பெண்களை அவமதிப்பதாகும் என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X