என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தபால் வாக்களிக்க பரிசீலனை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
புதுடெல்லி:
இந்தியாவில் இருந்து வேலைக்காகவும், பிற பணிகளுக்காகவும் ஏராளமானோர் வெளிநாடுகளில் தங்கி உள்ளனர்.
இந்தியாவில் பொது தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறும் போது வெளிநாடுகளில் தங்கியிருப்போர் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.
அவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நீண்ட காலமாக இருந்து வந்த இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சம்சீர்வயலில் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுபோட தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக சட்டத்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறியிருந்தது.
இந்திய தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக சம்சீர்வயலில் தெரிவித்து உள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார்.
வருகிற தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்