search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்புப் பணியில் போலீசார்
    X
    மீட்புப் பணியில் போலீசார்

    உ.பியில் சோகம் - கார் மீது எண்ணெய் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலி

    உத்தர பிரதேசத்தில் கார் ஒன்று எண்ணெய் லாரி மீது மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் யமுனா விரைவுசாலையில் பயணித்த கார் ஒன்றும், எண்ணெய் லாரி ஒன்றும் திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இதில் எண்ணெய் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் 2 பெண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×