search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    குவாரி வெடிவிபத்தில் 6 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

    கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரி வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமவளத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி கூறினார். கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    இந்நிலையில், குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×