என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு : மத்திய அரசு மீது பிரியங்கா கடும் தாக்கு
Byமாலை மலர்21 Feb 2021 12:01 AM GMT (Updated: 21 Feb 2021 12:01 AM GMT)
வாரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயராத சிறந்த நாட்கள் எவை? என பா.ஜனதா அரசு கூற வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் மோடி அரசை சாடியுள்ளார்.
லக்னோ:
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில் ரூ.100-ஐ நெருங்கி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். அதேநேரம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சாதாரண மக்களின் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் மோடி அரசை சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘வாரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயராத சிறந்த நாட்கள் எவை? என பா.ஜனதா அரசு கூற வேண்டும். ஏனெனில் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்களுக்கு மீதமுள்ள நாட்கள் அனைத்தும் மோசமான நாட்களாக அமைகின்றன’ என குறிப்பிட்டு இருந்தார்.
மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்காக பெட்ரோல்-டீசல் மீது கடுமையான வரி விதித்து அவற்றின் விலையை தினமும் ஏற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள பிரியங்கா, ஆனால் விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான விலையை அளிக்க மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில் ரூ.100-ஐ நெருங்கி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். அதேநேரம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சாதாரண மக்களின் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் மோடி அரசை சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘வாரத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயராத சிறந்த நாட்கள் எவை? என பா.ஜனதா அரசு கூற வேண்டும். ஏனெனில் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்களுக்கு மீதமுள்ள நாட்கள் அனைத்தும் மோசமான நாட்களாக அமைகின்றன’ என குறிப்பிட்டு இருந்தார்.
மோடி அரசு கார்பரேட் நிறுவனங்களுக்காக பெட்ரோல்-டீசல் மீது கடுமையான வரி விதித்து அவற்றின் விலையை தினமும் ஏற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள பிரியங்கா, ஆனால் விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான விலையை அளிக்க மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X