என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-மந்திரியாக ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ - திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் முழக்கம் வெளியீடு
Byமாலை மலர்20 Feb 2021 9:58 PM GMT (Updated: 20 Feb 2021 9:58 PM GMT)
மம்தாவே மீண்டும் முதல்-மந்திரியாவார் என்பதை வலியுறுத்தும் வகையிலும் ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ என்ற முழக்கத்தை திரிணாமுல் காங்கிரசார் நேற்று வெளியிட்டனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜனதாவும் ஏற்கனவே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது.
இந்த தேர்தல் களத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக பா.ஜனதாவுக்காக மாநிலத்தை சேராத தலைவர்கள் தேர்தல் சுற்றுலா வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இதை அடிப்படையாக கொண்டும், தற்போதைய முதல்-மந்திரி மம்தாவே மீண்டும் முதல்-மந்திரியாவார் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அந்த கட்சி தேர்தல் முழக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அந்தவகையில் ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ என்ற முழக்கத்தை திரிணாமுல் காங்கிரசார் நேற்று வெளியிட்டனர்.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக தங்களுடனேயே முதல்-மந்திரியாக இருந்த தங்கள் சொந்த மகளையே மாநில மக்கள் மீண்டும் முதல்-மந்திரியாக்க வேண்டும் என விரும்புகின்றனர். வங்காளத்தின் தேவைக்காக வெளியாட்களை அழைக்க நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பா.ஜனதாவும் ஏற்கனவே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது.
இந்த தேர்தல் களத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. குறிப்பாக பா.ஜனதாவுக்காக மாநிலத்தை சேராத தலைவர்கள் தேர்தல் சுற்றுலா வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இதை அடிப்படையாக கொண்டும், தற்போதைய முதல்-மந்திரி மம்தாவே மீண்டும் முதல்-மந்திரியாவார் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அந்த கட்சி தேர்தல் முழக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அந்தவகையில் ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ என்ற முழக்கத்தை திரிணாமுல் காங்கிரசார் நேற்று வெளியிட்டனர்.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக தங்களுடனேயே முதல்-மந்திரியாக இருந்த தங்கள் சொந்த மகளையே மாநில மக்கள் மீண்டும் முதல்-மந்திரியாக்க வேண்டும் என விரும்புகின்றனர். வங்காளத்தின் தேவைக்காக வெளியாட்களை அழைக்க நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X