என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல்காந்தியை சந்தித்து பேச சித்தராமையா இன்று டெல்லி பயணம்
Byமாலை மலர்16 Feb 2021 3:01 AM GMT (Updated: 16 Feb 2021 3:01 AM GMT)
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவர், ராகுல்காந்தியை சந்தித்து பேச உள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருபவர் சித்தராமையா. இவர், கடந்த ஒரு ஆண்டாக ராகுல்காந்தியை சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டு வந்தார். ஆனால் கொரோனா காரணமாக சித்தராமையாவால் டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் கொரோனாவால் ராகுல்காந்தியும் தன்னை சந்தித்து பேசுவதற்கு சித்தராமையாவுக்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்ததாக தொிகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஒரு ஆண்டுக்கு பின்பு அவர் டெல்லி செல்ல இருக்கிறார். இதற்காக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் விமானத்தில் காலை 9.45 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். பின்னர் அவர், டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் மதியம் ஓய்வெடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ராகுல்காந்தியை சந்தித்து சித்தராமையா பேச இருக்கிறார். கர்நாடகத்தில் மஸ்கி, பசவ கல்யாண், சிந்தகி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுபோல, பெலகாவி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்தும், கர்நாடக அரசியல் நிலவரம் குறித்தும் ராகுல்காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் பல்வேறு சாதிகள் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதுடன், குருப சமுதாயம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், சித்தராமையா தலைமையில் குருப சமுதாயத்தினர் தனிப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்தும் அவர் ராகுல்காந்தியுடன் பேச உள்ளதாகவும் தெரிகிறது. ராகுல்காந்தி தவிர காங்கிரஸ் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களையும் சித்தராமையா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பின்னர் நாளை (புதன்கிழமை) மதியம் அவர் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்புகிறார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருபவர் சித்தராமையா. இவர், கடந்த ஒரு ஆண்டாக ராகுல்காந்தியை சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டு வந்தார். ஆனால் கொரோனா காரணமாக சித்தராமையாவால் டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் கொரோனாவால் ராகுல்காந்தியும் தன்னை சந்தித்து பேசுவதற்கு சித்தராமையாவுக்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்ததாக தொிகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஒரு ஆண்டுக்கு பின்பு அவர் டெல்லி செல்ல இருக்கிறார். இதற்காக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் விமானத்தில் காலை 9.45 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். பின்னர் அவர், டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் மதியம் ஓய்வெடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ராகுல்காந்தியை சந்தித்து சித்தராமையா பேச இருக்கிறார். கர்நாடகத்தில் மஸ்கி, பசவ கல்யாண், சிந்தகி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதுபோல, பெலகாவி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்தும், கர்நாடக அரசியல் நிலவரம் குறித்தும் ராகுல்காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் பல்வேறு சாதிகள் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதுடன், குருப சமுதாயம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், சித்தராமையா தலைமையில் குருப சமுதாயத்தினர் தனிப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்தும் அவர் ராகுல்காந்தியுடன் பேச உள்ளதாகவும் தெரிகிறது. ராகுல்காந்தி தவிர காங்கிரஸ் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களையும் சித்தராமையா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பின்னர் நாளை (புதன்கிழமை) மதியம் அவர் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்புகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X