என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் 310 கி.மீ. நீள நீர்வழித்தடம் - பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்16 Feb 2021 1:31 AM GMT (Updated: 16 Feb 2021 1:31 AM GMT)
கேரளாவில் 310 கி.மீ. நீள நீர்வழித்தடத்தை முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் புதிய அத்தியாயமாக, 520 கி.மீ. நீள நீர்வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 310 கி.மீ. தூர நீர்வழித்தட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நீர்வழித்தடத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நீர்வழித்தடம் கேரளாவின் தெற்கு பகுதியான கோவளத்தை, வடக்குப் பகுதியான பெக்கால் உடன் இணைக்கிறது. இதில் வேலி என்ற இடத்திலிருந்து கடினம்குளம் என்ற இடம் வரை 11 கிலோ மீட்டர் தூரத்தில் 24 இருக்கைகள் கொண்ட சூரியசக்தி படகு சவாரி செய்யலாம். இந்த படகில் முதல் மந்திரி பினராயி விஜயன் பயணம் செய்தார்.
விழாவில் பினராயி விஜயன் பேசுகையில், இந்த நீர்வழித்தடத்தின் மூலம் சுற்றுலாத் துறையிலும், போக்குவரத்து துறையிலும் புதிய சாத்தியங்களுக்கு நாம் வழிவகுத்திருக்கிறோம். முதல் கட்ட பணிகளில் கால்வாய்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பணிகளின்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய்கள் அகலமாக்கப்படும் என தெரிவித்தார்.
கேரள போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் புதிய அத்தியாயமாக, 520 கி.மீ. நீள நீர்வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 310 கி.மீ. தூர நீர்வழித்தட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நீர்வழித்தடத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நீர்வழித்தடம் கேரளாவின் தெற்கு பகுதியான கோவளத்தை, வடக்குப் பகுதியான பெக்கால் உடன் இணைக்கிறது. இதில் வேலி என்ற இடத்திலிருந்து கடினம்குளம் என்ற இடம் வரை 11 கிலோ மீட்டர் தூரத்தில் 24 இருக்கைகள் கொண்ட சூரியசக்தி படகு சவாரி செய்யலாம். இந்த படகில் முதல் மந்திரி பினராயி விஜயன் பயணம் செய்தார்.
விழாவில் பினராயி விஜயன் பேசுகையில், இந்த நீர்வழித்தடத்தின் மூலம் சுற்றுலாத் துறையிலும், போக்குவரத்து துறையிலும் புதிய சாத்தியங்களுக்கு நாம் வழிவகுத்திருக்கிறோம். முதல் கட்ட பணிகளில் கால்வாய்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தகட்ட பணிகளின்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய்கள் அகலமாக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X