என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தினவிழாவில் சிறந்த அணிவகுப்பு : ஜாட் படைப்பிரிவுக்கு ராஜ்நாத் சிங் கோப்பை வழங்கினார்
Byமாலை மலர்15 Feb 2021 9:52 PM GMT (Updated: 15 Feb 2021 9:52 PM GMT)
குடியரசு தினவிழாவில் சிறந்த அணிவகுப்பை வெளிப்படுத்திய ஜாட் படைப்பிரிவுக்கு ராஜ்நாத் சிங் கோப்பை வழங்கி பாராட்டினார்.
புதுடெல்லி:
குடியரசு தினவிழாவில் சிறப்பான அணிவகுப்பை மேற்கொள்ளும் படைப்பிரிவுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு நடந்த விழாவில் மிடுக்கான அணிவகுப்பை வெளிப்படுத்திய ஜாட் படைப்பிரிவு சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
முப்படைகளுக்கான பிரிவில் இந்த படைப்பிரிவு பரிசை வென்றுள்ளது. இதைப்போல மத்திய ஆயுதப்படைகள் மற்றும் பிற சேவைகள் பிரிவில் டெல்லி போலீசார் சிறந்த அணிக்கான பரிசை வென்றுள்ளனர். இந்த 2 அணிகளுக்கும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஜாட் படைப்பிரிவின் வீரதீர செயல்களை பாராட்டினார். அத்துடன் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ளும் டெல்லி போலீசாருக்கும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினவிழாவில் சிறப்பான அணிவகுப்பை மேற்கொள்ளும் படைப்பிரிவுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு நடந்த விழாவில் மிடுக்கான அணிவகுப்பை வெளிப்படுத்திய ஜாட் படைப்பிரிவு சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
முப்படைகளுக்கான பிரிவில் இந்த படைப்பிரிவு பரிசை வென்றுள்ளது. இதைப்போல மத்திய ஆயுதப்படைகள் மற்றும் பிற சேவைகள் பிரிவில் டெல்லி போலீசார் சிறந்த அணிக்கான பரிசை வென்றுள்ளனர். இந்த 2 அணிகளுக்கும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஜாட் படைப்பிரிவின் வீரதீர செயல்களை பாராட்டினார். அத்துடன் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ளும் டெல்லி போலீசாருக்கும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X