என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி - 3 பேர் கைது
Byமாலை மலர்15 Feb 2021 8:30 PM GMT (Updated: 15 Feb 2021 8:30 PM GMT)
அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக ஆன்லைன் விற்பனை தளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இதை பார்த்து ஹர்சிதாவை தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி ஒருவர் அந்த சோபாவை வாங்க விருப்பம் தெரிவித்ததுடன், ஹர்ஷிதாவின் வங்கி கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய தொகையை செலுத்தியுள்ளார். பின்னர் 'கியூ ஆர்' கோடு லிங்கை அனுப்பி வைத்து, அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கி் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக ரூ.20 ஆயிரம் மற்றும் 14 ஆயிரம் என ரூ.34 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்சிதா டெல்லி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஹர்சிதா வங்கி கணக்கில் சுருட்டியது அரியானாவை சேர்ந்த சஜித் (வயது 26), உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த கபில் (18) மற்றும் மன்வீந்திர் சிங் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளி வாரிஸ் (25) என்பவர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக ஆன்லைன் விற்பனை தளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இதை பார்த்து ஹர்சிதாவை தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி ஒருவர் அந்த சோபாவை வாங்க விருப்பம் தெரிவித்ததுடன், ஹர்ஷிதாவின் வங்கி கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய தொகையை செலுத்தியுள்ளார். பின்னர் 'கியூ ஆர்' கோடு லிங்கை அனுப்பி வைத்து, அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கி் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக ரூ.20 ஆயிரம் மற்றும் 14 ஆயிரம் என ரூ.34 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X