என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக அளவில் கொரோனா மீட்பில் இந்தியா முதல் இடம் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
Byமாலை மலர்14 Feb 2021 7:42 PM GMT (Updated: 14 Feb 2021 7:42 PM GMT)
கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரசின் மோசமான பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் (97.31 சதவீதம்), உலகின் மிகச்சிறந்த மீட்பு விகிதங்களில் ஒன்றாகும்.
இதுவரையில் உலகமெங்கும் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரத்து 296 ஆகும். இந்தியா, 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 82 லட்சத்து 63 ஆயிரத்து 858 பேருக்கு, 1 லட்சத்து 72 ஆயிரத்து 852 அமர்வுகள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 68.55 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கொரோனா வைரசின் மோசமான பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியாதான் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் (97.31 சதவீதம்), உலகின் மிகச்சிறந்த மீட்பு விகிதங்களில் ஒன்றாகும்.
இதுவரையில் உலகமெங்கும் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரத்து 296 ஆகும். இந்தியா, 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 82 லட்சத்து 63 ஆயிரத்து 858 பேருக்கு, 1 லட்சத்து 72 ஆயிரத்து 852 அமர்வுகள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 68.55 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X