search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபிஷேக் பானர்ஜி பிரசாரம்
    X
    அபிஷேக் பானர்ஜி பிரசாரம்

    என் கழுத்தை அறுத்தாலும் இதைத்தான் சொல்வேன்... மம்தா பானர்ஜி உறவினரின் ஆவேச பிரசாரம்

    பாஜகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, வாக்குகளை திரிணாமுல் காங்கிரசுக்கு போடும்படி மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி பிரசாரம் செய்தார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க திரிணாமுல் காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. அதேசமயம், இந்த முறை ஆட்சியை எப்படியும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, தெற்கு கொல்கத்தாவில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    அவர்கள் (பாஜக) இங்கே வாக்குகளை பணம் கொடுத்து வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள், ஆனால், வாக்குகளை இரட்டை பூ (திரிணாமுல் காங்கிரசின் சின்னம்) சின்னத்திற்கு போடுங்கள். தங்கள் கலாச்சாரத்தை நம்மீது திணிக்க முயற்சிக்கும் வெளி நபர்களை ஒழிப்பதற்கான போராட்டம் இது.

    என் கழுத்தை அறுத்தாலும் நான் 'ஜெய் பங்களா'  'ஜெய் மம்தா பானர்ஜி' என்றுதான் கூறுவேன். எதுவாக இருந்தாலும், மம்தா பானர்ஜி, டெல்லிக்கு முன் தலைவணங்க மாட்டார்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×