என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக போலி செய்தி ஆலையை நடத்துகிறது: நானா படோலே குற்றச்சாட்டு
Byமாலை மலர்13 Feb 2021 2:06 AM GMT (Updated: 13 Feb 2021 2:06 AM GMT)
சமூகவலைதளங்களில் பா.ஜனதா போலி செய்தி ஆலையை நடத்துவதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை :
மகாராஷ்டிராவில் புதிய காங்கிரஸ் தலைவராக நானா படோலே பொறுப்பேற்று உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பா.ஜனதா கட்சி சமூகவலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்றார்.
மேலும் பா.ஜனதாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சமூகவலைதள பிரிவினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "பா.ஜனதா சமூகவலைதளங்களில் போலி செய்தி ஆலையை நடத்துகிறது. காங்கிரஸ் அதை அழித்து உண்மையை வெளிப்படுத்தும். காங்கிரஸ் டிஜிட்டல் பிரிவு கிராமப்புறங்களிலும் விரிவுப்படுத்தப்படும். 2 லட்சம் தொண்டர்கள் கட்சியின் சமூகவலைதள பிரிவுக்குள் சேர்க்கப்படுவார்கள். பா.ஜனதா தலைமையின் அழுத்தம் காரணமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி 12 எம்.எல்.சி.க்களின் நியமன விவகாரத்தில் முடிவு எடுக்காமல் உள்ளார்" என்றார்.
நானா படோலேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறுகையில், "ஒருவர் தோல்வி அடைந்து கொண்டு இருக்கும் போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறிகொண்டு தான் இருப்பார்கள்.
மேலும் காங்கிரஸ் எந்த நல்ல பணிகளையும் செய்யவில்லை. அவர்களுக்கு சமூகவலைதளத்தில் சொல்ல எதுவும் இல்லை" என்றார்.
மகாராஷ்டிராவில் புதிய காங்கிரஸ் தலைவராக நானா படோலே பொறுப்பேற்று உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பா.ஜனதா கட்சி சமூகவலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்றார்.
மேலும் பா.ஜனதாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சமூகவலைதள பிரிவினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "பா.ஜனதா சமூகவலைதளங்களில் போலி செய்தி ஆலையை நடத்துகிறது. காங்கிரஸ் அதை அழித்து உண்மையை வெளிப்படுத்தும். காங்கிரஸ் டிஜிட்டல் பிரிவு கிராமப்புறங்களிலும் விரிவுப்படுத்தப்படும். 2 லட்சம் தொண்டர்கள் கட்சியின் சமூகவலைதள பிரிவுக்குள் சேர்க்கப்படுவார்கள். பா.ஜனதா தலைமையின் அழுத்தம் காரணமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி 12 எம்.எல்.சி.க்களின் நியமன விவகாரத்தில் முடிவு எடுக்காமல் உள்ளார்" என்றார்.
நானா படோலேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறுகையில், "ஒருவர் தோல்வி அடைந்து கொண்டு இருக்கும் போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறிகொண்டு தான் இருப்பார்கள்.
மேலும் காங்கிரஸ் எந்த நல்ல பணிகளையும் செய்யவில்லை. அவர்களுக்கு சமூகவலைதளத்தில் சொல்ல எதுவும் இல்லை" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X