என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப்பின் அமிர்தசரசில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்
Byமாலை மலர்12 Feb 2021 7:15 PM GMT (Updated: 12 Feb 2021 8:51 PM GMT)
பஞ்சாப் அமிர்தசரஸில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சண்டிகர்:
நாட்டின் வடமாநிலங்களான ஜம்மு, டெல்லி, பஞ்சாப்பில் அடுத்தடுத்து நேற்று இரவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு 10.34 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
ஜலந்தர் நகரிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அமிர்தசரஸ் அல்லது பஞ்சாபின் பிற பகுதிகளில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என தெரிவித்தார்.
இதேபோன்று, உத்தரகாண்ட் மாநிலம் மற்றும் நொய்டா நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
நாட்டின் வடமாநிலங்களான ஜம்மு, டெல்லி, பஞ்சாப்பில் அடுத்தடுத்து நேற்று இரவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு 10.34 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
ஜலந்தர் நகரிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அமிர்தசரஸ் அல்லது பஞ்சாபின் பிற பகுதிகளில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என தெரிவித்தார்.
இதேபோன்று, உத்தரகாண்ட் மாநிலம் மற்றும் நொய்டா நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X