என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசாகப்பட்டினம் அருகே சோகம் - பள்ளத்தாக்கில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி
Byமாலை மலர்12 Feb 2021 6:18 PM GMT (Updated: 12 Feb 2021 6:18 PM GMT)
விசாகப்பட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
விசாகப்பட்டினம்:
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனந்தகிரி கிராமத்திற்கு அருகே ஒரு சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஐதராபாத்தின் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகே சாலையில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காயமடைந்த சில பயணிகளின் நிலைமை ஆபத்தானதாக உள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்சில் விசாகப்பட்டினம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X