search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்
    X
    ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்

    22 மாதங்களாக ரெயில்வே விபத்தில் பயணி உயிரிழப்பு இல்லை -மாநிலங்களவையில் மந்திரி தகவல்

    கிட்டத்தட்ட 22 மாதங்களாக ஒரு பயணிகூட ரெயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை என ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-

    2019ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி நடந்த விபத்தில் பயணி உயிரிழந்ததுதான், கடைசியாக ரெயில்வே விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு. அதன்பின்னர் கிட்டத்தட்ட 22 மாதங்களாக, ஒரு பயணிகூட ரெயில் விபத்துகளில் உயிரிழக்கவில்லை. 

    புதிய மறுசீரமைக்கப்பட்ட ரெயில்வே வாரியத்தில், இந்திய ரெயில்வேயில் முதன்முறையாக பாதுகாப்புக்கான இயக்குநர் ஜெனரலை நியமித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×