search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    வேளாண் சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம்: பிரியங்கா ஆவேசம்

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம். அதுவரை கட்சியின் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
    லக்னோ :

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு உத்தரபிரதேசத்தில் ‘கிசான் பஞ்சாயத்து’ என்ற பெயரில், விவசாயிகள் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன் முதலாவது கூட்டம், நேற்று சஹாரன்பூரில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் மோடியும், இதர பா.ஜனதா தலைவர்களும் அவமதித்து வருகிறார்கள். இந்த 3 வேளாண் சட்டங்களும் சாத்தான் போன்றவை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டங்களை கிழித்து குப்பையில் வீசுவோம். அதுவரை கட்சியின் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×