search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் தெண்டுல்கர்
    X
    சச்சின் தெண்டுல்கர்

    விவசாயிகளுக்கு ஆதரவாக தெண்டுல்கர் கருத்து கூறவேண்டும் - ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

    விவசாயிகளுக்கு ஆதரவாக சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் கருத்து கூற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
    மும்பை:

    அமெரிக்காவை சோ்ந்த பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டர் தன்பர்க் ஆகியோர் சமீபத்தில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக டுவிட்டரில் கருத்து கூறியிருந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஆதரவு தொிவிக்கும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரை சேர்ந்த ரஞ்சீத் பாகல் என்ற வாலிபர், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் வீட்டின் முன் ‘விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் எப்போது கருத்து கூறுவீர்கள் சச்சின்?' என்ற பதாகையுடன் நின்றுகொண்டு இருந்தார்.

    வாலிபர் பதாகையுடன் நிற்கும் அந்தப் படத்தை டுவிட்டரில் பகிா்ந்துள்ள மும்பையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி செய்தி தொடர்பாளர் பிரீத்தி சர்மா மேனன், சச்சின் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் ஒரு முறை கருத்து பகிர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், இது தொடர்பாக ஆவர் சச்சின் தெண்டுல்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
    Next Story
    ×