search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    வாழும்வரை வங்காள புலி போல் வாழ்வேன் - மம்தா பானர்ஜி

    நான் வாழும்வரை ராயல் வங்காள புலி போல் வாழ்வேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டமொன்றில் பேசும்பொழுது கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ., மந்திரி என பலரும் வெளியேறி பா.ஜ.க. உள்ளிட்ட வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இந்நிலையில், மூர்ஷிதாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் கோழை அல்ல. நான்  ஒரு வலிமையான நபர். எவ்வளவு காலம் வாழுகிறேனோ அதுவரை எனது தலையை உயர்த்தி நிமிர்ந்தே இருப்பேன். நான் வாழும்வரை ராயல் வங்காள புலி போல் வாழ்வேன் என குறிப்பிட்டார்.
    Next Story
    ×