search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
    X
    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

    வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ)  மற்றும் பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

    அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. 3 நாட்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. 

    இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-

    வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும்.  இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதமாக நீடிக்கிறது. இந்த முடிவிற்கு ஆதரவாக, நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 

    4வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க கடன் பெறும் சூழலை தொடர்ந்து அளிக்கப்படும்.

    இதேபோல் 2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் (சிபிஐ) 5.2 சதவீதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×