என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு- மத்திய மந்திரி தகவல்
புதுடெல்லி:
பாராளுமன்ற மேல்-சபையில் இன்று நடந்த விவாதத்தின்போது தி.மு.க. எம்.பி. வில்சன் தமிழகத்தில் விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய விமான போக்குவரத்து மந்தரி ஹர்தீப் சிங் புரி அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாட்டில் தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம் விமான நிலை யத்தை விரிவாக்கம் செய்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும்.
தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைத்தல் மற்றும் விரிவாக்கத்துக்காக 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50 கோடியும், வேலூர் விமான நிலையத்தக்கு ரூ.44 கோடியும், ராமநாதபுரத்துக்கு ரூ.36 கோடியும், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிய விமான நிலையங்களை சீரமைத்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய மந்திரி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்