என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்புப் படை தாக்குதலில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - உள்துறை அமைச்சகம்
Byமாலை மலர்2 Feb 2021 5:51 PM GMT (Updated: 2 Feb 2021 5:51 PM GMT)
ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் எல்லைகளில் நடந்த அத்துமீறல்கள், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்தாண்டு 5,133 முறை பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலில் பொதுமக்களில் 22 பேரும், பாதுகாப்பு படை வீரர்கள் 24 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நிகழ்ந்த 244 பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்களில் 37 பேர், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 62 பேர் மரணமடைந்துள்ளார். பாதுகாப்பு படை வீரர்களின் பதிலடியில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X