என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகர்நாடக மாவட்டங்களில் 4,500 தனியார் பள்ளிகள் மூடல்?
Byமாலை மலர்1 Feb 2021 1:46 AM GMT (Updated: 1 Feb 2021 1:46 AM GMT)
அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் வடகர்நாடக மாவட்டங்களில் 4,500 தனியார் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக அரசு நிதி ஒதுக்கி வருகிறது. வடகர்நாடக மாவட்டங்கள், கல்யாண கர்நாடக மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு வளர்ச்சி பணிகளை அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, பல்லாரி உள்பட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 4,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த தனியார் பள்ளிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அரசிடம் இருந்து நிதி உதவி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும் அரசு 30 சதவீதம் குறைத்திருக்கிறது.
ஏற்கனவே 7 ஆண்டுகளாக அரசு நிதி உதவி வழங்காமல் இருக்கும் சூழ்நிலையில், தற்போது கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதால், அந்த தனியார் பள்ளிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 4½ லட்சம் மாணவ, மாணவிகளின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது.
இதுதொடர்பாக கூடிய விரைவில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன்பிறகு இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதால், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு தீர்மானித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக அரசு நிதி ஒதுக்கி வருகிறது. வடகர்நாடக மாவட்டங்கள், கல்யாண கர்நாடக மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு வளர்ச்சி பணிகளை அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி, பீதர், ராய்ச்சூர், யாதகிரி, பல்லாரி உள்பட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 4,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த தனியார் பள்ளிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக அரசிடம் இருந்து நிதி உதவி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும் அரசு 30 சதவீதம் குறைத்திருக்கிறது.
ஏற்கனவே 7 ஆண்டுகளாக அரசு நிதி உதவி வழங்காமல் இருக்கும் சூழ்நிலையில், தற்போது கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதால், அந்த தனியார் பள்ளிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 4½ லட்சம் மாணவ, மாணவிகளின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது.
இதுதொடர்பாக கூடிய விரைவில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன்பிறகு இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதால், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு தீர்மானித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X