search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் சாலை விபத்து - மல்யுத்த வீரர்கள் உள்பட 12 பேர் பலி

    மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவில் நடந்த சாலை விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் காரத் அருகே சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இறந்த 3 பேர் புனேவைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள் என தெரிய வந்துள்ளது. 
    இவர்கள் கோலாப்பூரிலிருந்து ஒரு காரில் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வாகனங்கள் முந்தும்போது இரு  வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதேபோல், ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் கோட்புட் என்ற பகுதியில் நடைபெற்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

    பயணிகள் ஒடிசாவின் சிந்திகுடா கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள குல்தா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×