என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.20 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்31 Jan 2021 6:46 PM GMT (Updated: 31 Jan 2021 6:46 PM GMT)
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன இந்திய பொருளாதாரம், தற்போது படிப்படியாக கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. இது ஜி.எஸ்.டி. வசூலில் எதிரொலித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த மாத (ஜனவரி) ஜி.எஸ்.டி. வசூல் சுமார் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. அதாவது நேற்று மாலை 6 மணி வரை ரூ.1,19,847 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் அதிகம் பேர் வரி தாக்கல் செய்வார்கள் என்பதால், இது இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த மாதம்தான் இவ்வளவு அதிக தொகை வந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் கிடைத்த ரூ.1,15,174 கோடிதான் அதிகபட்சமாக இருந்தது.
தற்போது அதைவிட அதிக அளவு வசூலிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தகவல்களை மத்திய நிதியமைச்சகம் அறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன இந்திய பொருளாதாரம், தற்போது படிப்படியாக கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. இது ஜி.எஸ்.டி. வசூலில் எதிரொலித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த மாத (ஜனவரி) ஜி.எஸ்.டி. வசூல் சுமார் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. அதாவது நேற்று மாலை 6 மணி வரை ரூ.1,19,847 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் அதிகம் பேர் வரி தாக்கல் செய்வார்கள் என்பதால், இது இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த மாதம்தான் இவ்வளவு அதிக தொகை வந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் கிடைத்த ரூ.1,15,174 கோடிதான் அதிகபட்சமாக இருந்தது.
தற்போது அதைவிட அதிக அளவு வசூலிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தகவல்களை மத்திய நிதியமைச்சகம் அறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X