என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் பிப்ரவரி 28 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
Byமாலை மலர்30 Jan 2021 12:26 AM GMT (Updated: 30 Jan 2021 12:26 AM GMT)
மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
தற்போது மாநிலத்தில் ஏறக்குறைய இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்டனர். மும்பையைப் பொறுத்தவரை மின்சார ரெயில் போக்குவரத்தை தொடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கிவிடும். முக கவசம் அணிதல், கூட்டமாக பொது இடங்களுக்கு செல்லக் கூடாது, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நேற்று மாநில அரசு பிறப்பித்துள்ளது. இதேபோல கடைகள் இரவு 11 மணி வரையும், ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரையும் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X